Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுசெயலாளர் என்றே கடிதம் எழுதிய சசிக்கலா! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:16 IST)
அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே அதிமுக தொண்டர்களுக்கு சசிக்கலா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அதிமுகவின் பொன்விழா தொடக்க நிகழ்வு நடந்த நிலையில் சென்னையில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிக்கலா, அங்கு அதிமுக பொதுச்செயலாளர் என்றே தனக்கு கல்வெட்டு வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டே அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சசிக்கலா ”புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதுடன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. இது அறிந்ததுதான்., விரைவில் வெல்வோம் சகோதரர்களே என்று தெரிவித்துள்ளார். சசிக்கலாவின் இந்த கடிதம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments