Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி நேரத்தில் ஒளிப்பதிவாளரை மாற்றிய செல்வராகவன்!

கடைசி நேரத்தில் ஒளிப்பதிவாளரை மாற்றிய செல்வராகவன்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:32 IST)
இயக்குனர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்துக்கு முதலில் அரவிந்த் கிருஷ்ணாதான் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆனார்.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான அரவிந்த் கிருஷ்ணாவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்தார்.

ஆகஸ்ட் மாதமே தொடங்க இருந்த படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டு வந்த நிலையில் இப்போது இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இப்போது படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுக்குப் பதில் யாமினி என்ற ஒளிப்பதிவாளரை நியமித்துள்ளாராம் செல்வராகவன். இவர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக்காயிதம் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப் சீரிஸாகிறதா சீமான்- விஜயலட்சுமி விவகாரம்? இணையத்தில் பரவும் தகவல்!