Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை பின்பற்றும் சசிகலா ; பச்சை நிற சேலையில் தரிசனம்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (14:02 IST)
மறைந்த முதல்வர் ஜெ.வை பின்பற்றி அவரது தோழி சசிகலாவும் பச்சை நிற புடவையை அணிய தொடங்கியுள்ளார்.


 

 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. அதில் ஜெ.வின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்பின், போயஸ் கார்டன் சென்று, தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்தார். அப்போது சசிகலா பச்சை நிற புடவை அணிந்திருந்தார். 
 
வழக்கமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, செண்டிமெண்டாக பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியின் போது பச்சை நிறப்புடவையை அணிவார். அவரைப் பின்பற்றி அதிமுக பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அதிமுக தொடர்பான நிகழ்ச்சிகளில் பச்சை நிற புடவையில் பவனி வருவார்கள்.
 
தற்போது அதை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவும் பின் தொடர தொடங்கியுள்ளார். இன்று காலை முதலே அவர் பச்சை நிற புடவையிலேயே அதிமுக தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.
 
இந்த விவகாரம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments