Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’சசிகலா நாளை டிஸ்சார்ஜ்’’ - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

’’சசிகலா நாளை டிஸ்சார்ஜ்’’ - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
, சனி, 30 ஜனவரி 2021 (17:05 IST)
சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி காலையில் 4 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையானார்.

அவருக்குச் சிறையிலிருந்தபோது,கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிலநாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இன்னும்சில நாட்களில் தமிழகத்திற்கு அவர் வரவுள்ளதாகந்தகவக் வெளியானது.

மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.எனவே அவர் எப்போது தமிழகம் திரும்பவுள்ளார் என பெரும்கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் நாளை காலை 10 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்வுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அவர விரையில் பூரண குணமடையவேண்டுமென சசிகலா ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்துவரும் நிலையில் சசிகலா தமிழகம் திரும்பும் நாளை அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க தினகரன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் தயாராகவுள்ளார்.

சமீபத்தில் ஒபிஎஸ் மகள் சசிகலா நலம்பெற வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் தொடர்ந்து நடித்திருந்தால்.... இன்று நான் தான் சூப்பர் ஸ்டார் - சரத்குமார்