Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நினைச்சா ஆட்சியை கலைச்சிடுவேன்: மிரட்டும் அதிமுக அம்மா எம்.எல்.ஏ

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2017 (04:10 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் தினகரனின் ஆதரவாளரும், அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏவுமான கனகராஜ் 'நான் நினைச்சா ஆட்சி கலைந்துவிடும்' என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது நேற்று போலீசார் தடியடி நடத்தியதை அனைவரும் கண்டித்து வரும் நிலையில் இந்த தடியடிக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தடியடி குறித்து கருத்து தெரிவித்த சூலூர் அதிமுக அம்மா அணி எம்எல்ஏ கனகராஜ், 'மக்களுக்கு தொல்லை கொடுக்கும் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார். அணி மாறுவீர்களா என்று கேட்டதற்கு, எதற்கு அணி மாறவேண்டும். ராஜினாமா தான் செய்வேன். ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். என் தொகுதி மக்கள் சம்பாதிப்பார்கள், சம்பாதிக்கட்டும் என்று கூறினார்.

மேலும் 122 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் நான் ராஜினாமா செய்தால் பலம் குறையும், அதனால் ஆட்சி கலையும். ஆட்சி கலைந்தால் கலையட்டும் என்று ஆவேசமாக கூறி இந்த பிரச்சனையில் இருந்து அவர் தப்பித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments