சிங்கத்தின் முன்னால் சிறு முயல்களா? களமாட வாங்க! – சசிக்கலாவுக்கு ஆதரவாக போஸ்டர்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (11:59 IST)
அதிமுக தொண்டர்களோடு சசிக்கலா அடிக்கடி தொலைபேசியில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீப காலமாக சசிக்கலா ஆதரவு போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலா சிறையிலிருந்து விடுதலையானது முதலாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ஓய்வில் இருந்து வந்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்கட்சியாக உள்ள நிலையில் தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களிடம் சசிக்கலா செல்போனில் உரையாடுவது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீப காலமாக சசிக்கலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் வருகின்றன. தற்போது கும்பகோணத்தில் சசிக்கலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ”முயற் கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ! அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ! தியாகத் தலைவியே தூரோகத்தை வேரறுத்து களமாட வாருங்கள்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments