Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள்!

சசிகலா அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (16:59 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் நிரந்தர தீர்வுக்காக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களை போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.


 
 
இந்த சூழ்நிலையில் சசிகலா அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சசிகலா கண்டிப்பாக அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும். நக்சல்களின் வலது கையான நடராஜனை அதிகாரத்திலிருந்து துரத்தவேண்டும். பன்னீர்செல்வம் சிறந்த மனிதர் தான் ஆனால் நல்ல எண்ணங்களுடன் பயணிப்பது நகரத்திற்கு செல்லும் வழியாகும் என கூறியுள்ளார்.

 
சசிகலாவுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள இந்த கருத்துக்கு பலரும் எதிர்மறையான கருத்துக்களை அவரது டுவிட்டில் பதிவு செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments