Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது எனக்கு தெரியும்: திட்டம் வகுக்கும் சசிகலா!

யாரை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது எனக்கு தெரியும்: திட்டம் வகுக்கும் சசிகலா!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:45 IST)
பரபரப்பான அரசியல் சூழலில் 5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா மீண்டும் தமிழக அரசியலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வீட்டில் இருந்தபடியோ திட்டம் வகுப்பதாக தகவல்கள் வருகின்றன.


 
 
கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவால் நிச்சயம் அரசியலில் சில மாறுதல்கள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்ககூடாதவாறு அவருக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இருந்தாலும் சசிகலா ஏதாவது ரகசியமாக செய்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்படுகிறது.
 
பரோலில் வந்துள்ள சசிகலா தனது குடும்ப உறவுகளுடன் பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளார். அப்போது அரசியல் குறித்து பேசும்போது நீங்கள் வளர்த்துவிட்டவர்களே இன்று உங்களுக்கு எதிராக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார்கள் என மன்னார்குடி உறவுகள் தங்கள் வருத்தத்தை சசிகலாவிடம் தெரிவித்துள்ளது.
 
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சசிகலா, நான் பார்க்காத சோதனையா? நான் அம்மாவிடம் அரசியல் கற்றவள். பதவியில் இருந்தால் எப்படி நடந்துகொள்வார்கள், இல்லாதபோது எப்படி நடந்துகொள்வார்கள் என்பது எனக்கு தெரியும். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதும் எனக்கு தெரியும். போகப் போகத்தான் என் அரசியல் காய் நகர்த்தல்களை பார்ப்பீர்கள் என சசிகலா குடும்ப உறவுகளிடம் உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments