Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அதிமுக சேர்க்க மறுக்க அவர்கள் யார்? – சசிகலா அதிரடி!

Webdunia
புதன், 25 மே 2022 (10:54 IST)
நீண்ட காலமாக சசிகலா அதிமுகவில் இணைவாரா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் விரைவில் அதிமுக தலைமையை ஏற்க போவதாக சசிக்கலா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுசெயலாளராக இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு விடுதலையான சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்றும், இணைக்க வேண்டும் என்றும் அதிமுகவிலேயே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அடிக்கடி சசிகலா சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தான் அதிமுகவிற்கு விரைவில் தலைமை தாங்க உள்ளதாக சசிகலா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “அதிமுகவில் ஒரு சிலர்தான் என்னை எதிர்க்கின்றனர். பலர் என்னுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். என்னை அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்ல அவர்கள் யார்? எனது தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படும் என எனக்கு 100 சதவீத நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments