Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மக்களுக்காக சிறையிலேயே விரதம்லாம் இருந்தேன்! – ஆடியோவில் சசிக்கலா உருக்கம்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (08:49 IST)
தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் செல்போன் வழியாக பேசி வரும் சசிக்கலா தமிழக மக்களுக்காக சிறையிலேயே விரதம் இருந்ததாக பேசியுள்ளார்.

அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தேனியை சேர்ந்த கண்ணன் என்ற தொண்டரிடம் பேசிய சசிக்கலா “கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மோசமான நிலைக்கு சென்ற கட்சியை நான் இருக்கும் வரை சரி செய்வேன். பெங்களூர் சிறையில் நான் 4 வருடமாக இருந்தாலும் என் உயிர் தமிழக மக்களையே சுற்றி வந்தது. தமிழக மக்களுக்கு கொரோனா வந்துவிட கூடாதே என நான் செய்யாத பூஜை கிடையாது. மாதக்கணக்கில் விரதம் கூட இருந்தேன்” என பேசியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments