சூர்யா முடிந்தால் ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கட்டும்..! – பாஜக கரு.நாகராஜன்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (08:34 IST)
தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், நீட் சமூக நீதியை நிலைநாட்டுவதாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு குறித்த ஆய்வு குழுவை தமிழக அரசு அமைத்ததற்கு எதிராக பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கரு.நாகராஜன் “நீட் தேர்வை ரத்து செய்ய சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக நயினார் நாகேந்திரன் சட்டசபையில் கூறினார். சட்டரீதியாக என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவதுதானே தவிர ஆய்வு குழு அமைப்பதல்ல. நீட் சமூக நீதியை நிலைநாட்டுகிறது. 12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் கூட நீட் நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் மருத்துவராக முடியும்” என கூறியுள்ளார்.

மேலும் நீட் தேர்வு குறித்து உதயநிதி, சூர்யா போன்றோர் கருத்து தெரிவித்திருப்பது குறித்து பேசிய அவர் “உதயநிதி நீட் தேர்வு குறித்து பேசி வருவது அரசியல் சார்பு கொண்டது. சூர்யாவால் முடிந்தால் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கட்டும்” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments