Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. வந்து சென்ற வீட்டை விட்டு வெளியேறி வேறு வீட்டுக்கு சென்ற திவாகரன்: காரணம் என்ன தெரியுமா?

ஜெ. வந்து சென்ற வீட்டை விட்டு வெளியேறி வேறு வீட்டுக்கு சென்ற திவாகரன்: காரணம் என்ன தெரியுமா?

ஜெ. வந்து சென்ற வீட்டை விட்டு வெளியேறி வேறு வீட்டுக்கு சென்ற திவாகரன்: காரணம் என்ன தெரியுமா?
, செவ்வாய், 2 மே 2017 (11:18 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் இத்தனை நாட்களாக இருந்த வீட்டை விட்டு வெளியேறி தற்போது வேறு வீட்டிக்கு குடியேறியுள்ளாராம்.


 
 
ஜெயலலிதாவின் நிழலாக சசிகலாவை சொல்வார்கள், அதுபோல சசிகலாவின் நிழலாக இருப்பவர் அவரது தம்பி திவாகரன். தற்போது தினகரனை ஒதுக்கி வைத்திருக்கும் அமைச்சர்கள் கூட திவாகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
 
திவாகரனின் சொந்த கிராமம் மன்னார்குடி பக்கத்தில் உள்ள சுந்தரக்கோட்டை. இங்கு திவாகரனுக்கு சொந்தமாக சொகுசு பங்களா ஒன்று உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட இந்த பங்களாவுக்கு ஒருமுறை வந்திருக்கிறார்.
 
இது நாள்வரை சுந்தரக்கோட்டையில் இருந்த திவாகரன் குடும்பம் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மன்னை நகருக்கு குடிபெயர்ந்துள்ளார்கள். செண்டிமெண்ட் ஆக, மன்னை நகர் வீடுதான் இனி நல்லாயிருக்கும் என ஜோதிடர்கள் சொன்னதால், இடத்தை மாற்றியிருக்கிறாராம் திவாகரன் என தகவல்கள் வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓலா கார் சேவை நிறுவனம்: தினசரி ரூ.6 கோடி நஷ்டம்!!