Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா நியமனம் ரத்து ; இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது - தீர்மானம் நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:38 IST)
தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் ரத்து என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.  
 
இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பின், விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது.
 
இதில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்கம் செய்வது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
அதன் படி, தற்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக, எல்லோரும் எதிர்பார்த்த சசிகலா நியமனம் செல்லாது என தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜெ.விற்கு பின் கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments