Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா நியமனம் ரத்து ; இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது - தீர்மானம் நிறைவேற்றம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (11:38 IST)
தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் ரத்து என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.  
 
இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பின், விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது.
 
இதில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்கம் செய்வது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
 
அதன் படி, தற்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக, எல்லோரும் எதிர்பார்த்த சசிகலா நியமனம் செல்லாது என தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜெ.விற்கு பின் கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments