உடனே விசாரிக்கவேண்டும்..சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் முறையீடு

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:38 IST)
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக கட்சி கொடியுள்ள கார் கொடுத்ததாக 7 பேர் அதிரடியாக அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா விரைவில் எல்லோரையும் சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.

தற்போது மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வெடுத்துவரும் சசிகலா விரைவில் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வழக்கறிஞர் குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகாலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டுமென சென்னை சிவில் நீதிமன்றத்தில் இன்ரு சசிகலா தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.

இவ்வழக்கு அடுத்தமாதம் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலை நோக்கி அதிமுக - தவெக கூட்டணி? எடப்பாடி பழனிசாமியின் 'சுப ஆரம்பம்' Vs விஜய்யின் மறுப்பு!

பீகார் தேர்தல்: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு - பா.ஜ.க., JDU தலா 101 இடங்கள்!

மிகக்குறைந்த வித்தியாசம்தான்.. பீகாரில் ஆட்சி அமைப்பது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

கரூர் துயர சம்பவ விவகாரம்: இன்னொரு தவெக மாவட்ட செயலாளர் கைது.. நீதிபதியை விமர்சித்தாரா?

இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்க ஊடுருவல் தான் காரணம்: அமித்ஷா சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments