Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூக்கியெறிய ஜெயலலிதா தயங்குவதில்லை; எங்களுக்கும் மானம் இருக்கிறது: பெண் எம்.பி. குமுறல்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (13:20 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கட்சிக்காக உழைத்தவர்களை எந்த நிமிடத்திலும் தயவு தாட்சண்யம் இன்றி தூக்கியெறிய தயங்குவதில்லை என அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட பெண் எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.


 
 
தனக்கு கொலை மிரட்டல் வருவதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா, மேயராக இருந்த எனக்கு எம்.பி பதவி ஒன்றும் சாதாரண பதவி கிடையாது. இந்த பதவியை பெறும் அளவிற்கு நான் அதிமுக-வின் வளர்ச்சிக்கு அத்தனை உழைத்திருக்கிறேன். எனக்கு இந்த பதவி வழங்கப்பட்டபோது என்னைவிட சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுங்கள் என்று மறுத்தேன் என்றார்.
 
என் திறமை மீது நம்பிக்கை வைத்து, நான் கட்சிக்காக உழைத்ததை வைத்து இந்த பதவியை கொடுத்தார்கள். என் உழைப்பு குறித்து அடிமட்ட சாதாரண கட்சித் தொண்டனுக்குக் கூடத் தெரியும்.
 
என்னைப் போல் எத்தனையோ பேர் கட்சிக்காக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், எந்த நிமிடத்திலும் அவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தூக்கியெறிய ஜெயலலிதா தயங்குவதில்லை. எங்களுக்கும் மானம் இருக்கிறது. மரியாதை இருக்கிறது. சுயமரியாதை இருக்கிறது. அதையெல்லாம் துச்சமென மதித்து தூக்கி எறிபவர் முதல்வர் ஜெயலலிதா என பேசிய சசிகலா புஷ்பா தனக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தை செய்தியாளர்களிடம் காட்டி, தனது நிலமை குறித்து குமுறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments