2 நாள் கெடு; ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிடலனா நடவடிக்கை எடுப்பேன்: சொல்வது யார் தெரியுமா?
2 நாள் கெடு; ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிடலனா நடவடிக்கை எடுப்பேன்: சொல்வது யார் தெரியுமா?
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கூறிய அவர், முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை. அங்கு என்ன தான் நடக்கிறது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் அறிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு.
மேலும், இரண்டு நாட்களில் தெரியவில்லை என்றால் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பேன். திமுக தலைவர் கலைஞர் சொன்னது போல் புகைபடம் வெளியிட வேண்டும், அல்லது வாட்ஸ் ஆப்பில் குரல் செய்தியாவது வெளியிட வேண்டும் எனவும் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.