Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா புஷ்பாவும் சர்ச்சைகளும்!

சசிகலா புஷ்பாவும் சர்ச்சைகளும்!
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (16:16 IST)
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா கடந்த சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார்.


 
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா புஷ்பா சர்ச்சையில் மாட்டுவது புதிதல்ல. இதற்கு முன்னர் சசிகலா புஷ்பா வலிபர் ஒருவருடன் போனில் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அந்த ஆடியோவில் சசிகலா புஷ்பா குடித்து விட்டு போதையில் இருந்ததாக கூறி அதிர்ச்சி அளித்தார். இது குறித்து அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
 
பின்னர் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சசிகலா புஷ்பாவும், இதே திருச்சி சிவாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களை இங்கு பதிவேற்ற முடியாது அவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள்.
 
இந்த புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவா கூறினாலும், சசிகலா புஷ்பா தரப்பில் எந்த மறுப்பும், விளக்கமும் இல்லை.
 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை கன்னத்தில் பளார், பளார் என அறைந்தார் சசிகலா புஷ்பா. பின்னர் தான் தான் திருச்சி சிவாவை அறைந்ததாக தைரியமாக பேட்டியளித்தார்.
 
இதனையடுத்து ஜெயலலிதா தரப்பை சந்தித்து விட்டு, இன்று மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கோரினார்.
 
தொடர்ந்து பேசிய அவர் அதிமுக தலைமை தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும்,  தன்னை அடித்ததாகவும் கூறி மாநிலங்களவையே அதிர வைத்தார். தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மாநில அரசால் ஆபத்து உள்ளது எனவும் முழங்கினார்.
 
இந்த சூழலில் சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்ட ஜெயலலிதா கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பில் இருக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
 
தொடர் சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழுகையை நிறுத்தாத குழந்தையின் மூச்சை நிறுத்திய வளர்ப்புத்தாய்