Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு அடுத்த ஆப்பு... செல்லாத நோட்டை வைத்து வளைத்து போட்ட சொத்து!

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (15:38 IST)
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் குறித்த விவரங்களும் தற்போது வெளிவந்துள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது மக்கள் தங்களது பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த சமயத்தில் சசிகலா தன்னிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.
 
ஆம், சுமார் ரூ.1,500 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் சசிகலா. இந்த சொத்துக்கள் அனைத்தும் நிறுவனங்களாக வாங்கப்பட்டது. சசிகலா மொத்தம் 7 நிறுவனங்களை வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், கோவையில் செந்தில் பேப்பர் போர்டு, கோவையில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஆகியவை சசிகலா வாங்கிய நிறுவனங்களில் பெயர் இந்த லிஸ்டில் அடிபடுகிறது. 
 
மேலும், ரூ.1500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை அதிகாரிகளால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments