வாக்காளர் பட்டியலில் சசிக்கலா பெயர் நீக்கம்!? – ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் சசிக்கலா மற்றும் இளவரசியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடத்தி வரும் நிலையில் சசிக்கலா மற்றும் அவரது சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா, இளவரசி ஆகியோருக்கான வாக்காளர் அடையாள அட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் முகவரியிலேயே இருந்தது. இந்நிலையில் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது திட்டமிட்ட சதி என அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் விடுவிப்பு: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments