Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைதியின் சின்னம் சசிகலா; புன்னகை மன்னன் டிடிவி தினகரன்: சட்டசபையில் புகழாரம்!

அமைதியின் சின்னம் சசிகலா; புன்னகை மன்னன் டிடிவி தினகரன்: சட்டசபையில் புகழாரம்!

Advertiesment
அமைதியின் சின்னம் சசிகலா; புன்னகை மன்னன் டிடிவி தினகரன்: சட்டசபையில் புகழாரம்!
, வியாழன், 13 ஜூலை 2017 (15:15 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அமைதியின் சின்னம் எனவும். டிடிவி தினகரன் புன்னகை மன்னன் எனவும் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் சட்டசபையில் புகழாரம் சூட்டியுள்ளார்.


 
 
அதிமுகவில் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகள் தற்போது உள்ளன. இதில் உள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் ஆதரவு தலைவரை புகழ்ந்து வருகின்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் தினகரன், சசிகலா ஆதரவு அணியில் உள்ளார்.
 
ஆரம்பத்தில் எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் எம்எல்ஏ அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தினகரன் அணிக்கு சென்று ஆதரவளித்தார். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் பேசிய பழனியப்பன் சசிகலா மற்றும் தினகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.
 
தற்போது சசிகலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கைதியாக உள்ளார். இந்நிலையில் சசிகலாவை அமைதியின் சின்னம் என மான்புமிகு தமிழக சட்டசபையில் புகழ்ந்துள்ளார் பழனியப்பன். மேலும் தினகரனை புன்னகை மன்னன் எனவும் புகழ்ந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார் பழனியப்பன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்த சூரியன்; நாசா தகவல்