Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனையில் கை அசைத்த சசிகலா!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (14:36 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன. 
 
இதனிடையே திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு கொரோனா தொற்று  இருக்குமோ என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
அந்த சோதனையில் கொரோனா பாதிப்பில்லை என ரிசல்ட் வந்தது.  சிறையிலிருந்து விடுதலை ஆக ஒருவாரம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனையில் கை அசைத்த சசிகலாவின்  புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சிடி ஸ்கேன் எடுக்க வேறு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டது என தகவல்கள் கூறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments