Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு: தீவிர சிகிச்சையில் சசிகலா கணவர் நடராஜன்!

கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு: தீவிர சிகிச்சையில் சசிகலா கணவர் நடராஜன்!

கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு: தீவிர சிகிச்சையில் சசிகலா கணவர் நடராஜன்!
, திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:55 IST)
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை செயலிழந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார் சசிகலா. அவரது கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். முதலில் அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
அதன் பின்னர் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்னர் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக அப்போது கூறப்பட்டது.
 
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்பட்டது. இந்த பிரச்சனைகள் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்த நடராஜன் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் நடராஜனுக்கு சிறுநீரக, கல்லீரல் முழுமையாக செயலிழந்து விட்டதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டில், காத்திருப்போர் பட்டியலில் அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கல்லீரல் தானமாக கிடைத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லீரல் பொருத்தப்பட்டு குணமடைய வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி