பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.. அதுதான் எனக்கான பரிசு! – சசிக்கலா வேண்டுகோள்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (11:09 IST)
கொரோனா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதே தனக்கு அளிக்கும் பரிசு என சசிக்கலா தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த சசிக்கலா சமீப காலமாக தன்னை அதிமுக பொதுசெயலாளர் என குறிப்பிடுவதும், தொண்டர்களை சந்திப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சசிக்கலா ” என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எனக்கு மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் “அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா  நோயால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments