Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா நினைவிடம் செல்ல தடை; எம்ஜிஆருக்கு மரியாதை செய்யும் சசிக்கலா!

ஜெயலலிதா நினைவிடம் செல்ல தடை; எம்ஜிஆருக்கு மரியாதை செய்யும் சசிக்கலா!
, ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (15:14 IST)
சென்னை வரும் சசிக்கலா, ஜெயலலிதா நினைவிடம் செல்ல தடை இருப்பதால் அவர் எம்ஜிஆருக்கு மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா காரணமாக சிகிச்சை பெற்ற அவர் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்ததால் பெங்களூரிலிருந்து நாளை சென்னை வருகிறார் சசிக்கலா.

இதனால் சென்னை முழுவதும் பல பகுதிகளில் அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சசிக்கலா வருகையையொட்டி சென்னையின் பிரதான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம், வேதா இல்லம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சென்னை வரும் சசிக்கலா ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளக்கம் கொடுத்தும் விருப்பம் காட்டாத மக்கள்! – சிக்கலில் வாட்ஸப்; கொண்டாட்டத்தில் டெலிகிராம்!