Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய சசிகலா - பிரஸ் மீட் கொடுக்காமல் தெறித்து ஓடிய தினகரன்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (14:32 IST)
சிறையில் தன்னை சந்திக்க வந்த தினகரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகலா கடும் கோபத்தை காட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தொடக்கத்திலிருந்தே சசிகலாவின் பேச்சை தினகரன் கேட்காமல் நடந்து கொள்கிறார். திவாகரன், ஜெயானந்த் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை ஒதுக்கி வைத்து அரசியல் செய்கிறார் என்கிற புகார்கள்கள் சசிகலாவிடம் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. விவேக் ஜெயராமன் அதை தொடர்ந்து செய்து வந்தார். தற்போது அவர் இந்த விஷயத்தில் அவ்வளவாக தலையிடுவதில்லை.
 
தற்போது திவாகரன் - தினகரன் மோதல் சசிகலா குடும்பத்தினரிடையே பிரிவினியை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் பற்றி ஏராளமான புகார்களை திவாகரன் வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரம் பூதாகரம் ஆகியதும், தினகரன், திவாகரன் இருவருமே சசிகலாவை சந்திக்க விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இருவர்கள் மீதும் கடுமையான கோபத்தில் இருந்த சசிகலா யாரையும் சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
ஆனாலும், தினகரன், சசிகலாவின் உறவினர்கள் பழனி, பாலாஜி, டாக்டர் வெங்கட் உள்ளிட்ட 11 பேர் சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து அக்ரஹாரா சிறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் நேற்று சசிகலா சந்தித்தார்.

 
அப்போது இறுக்கமான முகத்துடன் இருந்த சசிகலா, தொடக்கம் முதல் நான் கூறியதை நீ கேட்கவில்லை. அக்கா இல்லாமல் போனதால் அதிமுகவை உடைத்து சிதைத்து விட்டீர்கள்.  இதற்கு நம் குடும்பமே காரணமாகி விட்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, துரோகிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அவர்கள் டீமில் இருந்து என்னை பார்க்க நேரம் கேட்டுள்ளனர். இப்போது நான் எதுவும் கூற முடியாது. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதுவரைக்கும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என கோபமாக பேசி அனைவரையும் அனுப்பி விட்டாராம்.
 
எனவே, வழக்கமாக சசிகலாவை பார்த்துவிட்டு, சிறை வாசலிலேயே ஓரு பிரஸ் மீட் கொடுக்கும் தினகரன், இந்த முறை செய்தியாளர்களிடம் பேசாமல் வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments