Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி.. அன்புமணி, சசிகலா வாழ்த்து..!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (13:19 IST)
தேசிய மகளிர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி, இறுதிப்போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் அந்த அணிக்கு  அன்புமணி, சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
அன்புமணி தனது வாழ்த்தில், ‘பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில் ஹரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வாகையர் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி  வீராங்கணைகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு அணியை சிறப்பாக வழிநடத்திய கடலூர் வீராங்கனை இந்துமதி கதிரேசனுக்கு சிறப்பு வாழ்த்துகள்! என்று தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
அதேபோல் சசிகலா தனது ட்விட்டரில், ‘பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழக மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த அனைத்து வீராங்கனைகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, மென்மேலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments