Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக இப்படி நடந்து கொள்ளும் என சசிகலா அப்பவே சொன்னாங்க! - அதிமுக எம்.எல்.ஏ. பளார்

திமுக இப்படி நடந்து கொள்ளும் என சசிகலா அப்பவே சொன்னாங்க! - அதிமுக எம்.எல்.ஏ. பளார்
, வெள்ளி, 3 மார்ச் 2017 (08:11 IST)
சட்டசபையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்றும் ஆனால், பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்றும் சசிகலா சொன்னதாக சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


 

சாத்தூர் தொகுதி, கீழராஜகுலராமன் கிராமத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “சட்டசபையில் திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவார்கள். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சசிகலா சொன்னார்.

அவருடைய பேச்சைக் கேட்டு, சட்டசபையில் மூணு மணி நேரம் கை கட்டி, வாய் பொத்தி, அமைதியா இருந்தோம். ஸ்டாலினும், துரைமுருகனும் தூண்டிவிட்டு திமுக எம்எலஏக்கள் வன்முறையில் ஈடுபட்டாங்க. அப்பொழுது நாங்கள் அமைதி காத்ததனால், தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றி விட்டோம்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோக்-பெப்சியை நடுரோட்டில் கொட்டி போராட்டம் நடத்திய வெள்ளையன் கைது