Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழலுக்குப் புறப்பட்ட சரவணபவன் ராஜகோபால் – நீதிமன்ற உத்தரவை அடுத்து சரண்டர் !

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (09:42 IST)
கொலை வழக்கில் சிக்கிய சரவணபவன் ராஜகோபால் நேற்று நீதிமன்றத்தில் சரண்டர் ஆனதை அடுத்து புழல் சிறைக்குஅழைத்து செல்லப்பட்டார்.

தனது ஹோட்டலில் பணி செய்த ஜீவஜோதி என்ற பெண் ஊழியரை மூன்றாவதாக திருமனம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அவரது கணவரனான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தததாக சரவனபவன் உரிமையாளர் ராஜகோபால். 2004-ல் வழக்குப்பதிவு இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் 2009 ஆம் ஆண்டு  மேல் முறையீடு செய்ய ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இந்த தண்டனையை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகவேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் ராஜகோபால் தனது வயது மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தற்போது சரணடைய இயலாது என்றும் தான் சரணடைய கால அவகாசம் வழங்குமாறும் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் உடனே சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து நேற்று மாலை விஜயா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments