Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!!

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (11:06 IST)
சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
ஜீவ ஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 
 
ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி அவர் சரண் அடைய அவகாசம் கேட்டு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் கடந்த 9 ஆம் தேதி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
 
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜகோபால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments