Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாடி வைத்தவர் பிரதமர் ஆகும்போது தாடி வைத்த நான் முதல்வர் ஆகக்கூடாதா?

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (18:54 IST)
தாடி வைத்த மோடி பிரதமராக இருக்கும்போது அதே தாடி வைத்த நான் முதல்வர் ஆகக்கூடாதா? என நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தூத்துகுடியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மகளிர் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், 'ஒரு கட்சி என்றால் அந்த கட்சியின் தலைவன் முதல்வராக வேண்டும் என்பது அந்த கட்சியின் தொண்டர்கள் நினைப்பது வழக்கமே

இந்த 22 வருடங்களில் கூட்டணிக்காக உழைத்துவிட்டேன். ஆகவே இனிமேலாவது எங்களுக்காக எங்கள் கட்சிக்காக உழைக்க திட்டமிட்டுள்ளேன். எங்கள் கட்சிக்கு எத்தனை சதவீதம் ஓட்டு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.

மேலும் முதல்வர் ஆகும் எண்ணம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், 'தாடி வைத்த மோடி பிரதமர் ஆகியிருக்கும்போது அதே தாடி வைத்த நான் முதல்வர் ஆகக்கூடாதா? என்ற எதிர்க்கேள்வியை சரத்குமார் கேட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments