Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (21:34 IST)
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் அகில இந்திய மக்கள் சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது
 
அதேபோல் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய சரத்குமார் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயகக் கட்சியும் இணைந்து புதிய மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கி இருப்பதாக அறிவித்துள்ளனர் 
 
ஏற்கனவே சரத்குமார் மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்த நிலையில் அவர் புதிய மாற்றத்திற்கான கூட்டணி என்பதை சசிகலா கூட்டணியை தெரிவித்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments