Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி அங்கப் பிரதிஷ்டம் செய்த சரத்குமார்.. வேண்டுதல் பலிக்குமா?

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (11:04 IST)
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி பெற வேண்டி விருதுநகரில் உள்ள கோவிலில் சரத்குமார் அங்கப் பிரதிஷ்டம்  செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கௌசிக் ஆகியோர் போட்டியிட்டனர்.  இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் மனைவி ராதிகா சரத்குமார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விருதுநகரில் உள்ள கோவிலில் இன்று காலை சரத்குமார் அங்கப் பிரதிஷ்டம் செய்தார். அவருடன் ராதிகா உடன் இருந்தார் என்பதும் அதன் பின் இருவரும் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சரத்குமாரின் வேண்டுதல் பலித்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது ராதிகா சரத்குமார் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments