தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் - கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து - முதல்வர் ஸ்டாலின்..!

Senthil Velan
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (20:21 IST)
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார். என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்,இன்றிலிருந்து எங்க வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா கூறியுள்ளார்.
 
இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: GOAT TRAILER UPDATE..! நாளை முறையான அறிவிப்பு.! தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.!!
 
கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு என்றும் நான் மீண்டும் சொல்கிறேன். கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments