Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் விவகாரம்; கல்லூரி மாணவன் வாயில் விஷம் ஊற்றி கொலை?

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (11:58 IST)
சேலம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் இறந்து போன கல்லூரி மாணவன் ஜெயக்குமாரை அவர் காதலித்த பெண்ணின் வீட்டார் வாயில் விஷம் ஊற்றி கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


 
 
சேலம், வாழப்பாடி அருகே பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் ஜெயக்குமார். இவர் காதலித்து வந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த 3-ஆம் தேதி அழைத்து சென்றுள்ளனர்.
 
பின்னர் அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அழைத்து வந்த சிறிது நேரத்திலேயே ஜெயக்குமார் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்ட மாணவன் ஜெயக்குமாரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை சகாதேவன் புகார் அளித்துள்ளார்.
 
என்னுடைய மகன் ஒரு பெண்ணை காதலித்துவந்த பிரச்சனையில் அவனுக்கு வாயில் விஷம் ஊற்றியிருக்கலாம். இதனால்தான் அவர் இறந்திருக்கிறார். கொலை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என அவர் காவல்துறையில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயநாடு தொகுதி இடைத்தேர்தல்.. தயாராகிறார் பிரியங்கா காந்தி.. மீண்டும் ஆனி போட்டி?

5 பேர் உயிரிழந்த துயரம்.. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்! திருமாவளவன்

ரத்தன் டாடா உடல்நலம் குறித்து வதந்தி.. எக்ஸ் பக்கத்தில் அவரே அளித்த விளக்கம்..!

இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!

கட்டுக்கடங்காத கூட்டம்.. டிக்கெட் இல்லாமல் மெட்ரோவில் பயணம் செய்த பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments