Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் பலி

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (11:51 IST)
கரூர் அருகே மணல் லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், சம்பவம் இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை பகுதியை அடுத்த மேலகம்பேஸ்வரம் பகுதியை சார்ந்த சக்தி (35), வெள்ளைச்சாமி (வயது 36) ஆகிய இருவரும் பணி நிமித்தமாக குளித்தலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 
 
இந்நிலையில் குளித்தலையிலிருந்து மணப்பாறையை நோக்கி மணல் ஏற்றி சென்ற லாரி தேசிய மங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே மோதியது. 
 
இந்த சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மணல் லாரிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி, அப்பகுதியில் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் குளித்தலை டூ மணப்பாறை  நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் குளித்தலை போலீஸார் விரைந்து சமரச பேச்சுவார்த்தையின் கீழ் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
 
இந்த விபத்தில் பலியான இருவரது உடல்கள் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து குளித்தலை நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயநாடு தொகுதி இடைத்தேர்தல்.. தயாராகிறார் பிரியங்கா காந்தி.. மீண்டும் ஆனி போட்டி?

5 பேர் உயிரிழந்த துயரம்.. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்! திருமாவளவன்

ரத்தன் டாடா உடல்நலம் குறித்து வதந்தி.. எக்ஸ் பக்கத்தில் அவரே அளித்த விளக்கம்..!

இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!

கட்டுக்கடங்காத கூட்டம்.. டிக்கெட் இல்லாமல் மெட்ரோவில் பயணம் செய்த பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments