Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்ணை நிர்வாணமாக பூஜைக்கு அழைத்த சாமியார் நாக்கு துண்டிப்பு

பெண்ணை நிர்வாணமாக பூஜைக்கு அழைத்த சாமியார் நாக்கு துண்டிப்பு
, வெள்ளி, 11 நவம்பர் 2016 (14:35 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரிகார பூஜை செய்ய சாமியார் ஒருவர் பெண்ணை நிர்வாணமாக புஜைக்கு அழைத்துள்ளார். இதனால் சாமியாரின் நாக்க்கு அறுக்கப்பட்டது.


 

 
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுமான பணிக்கு தடங்கல் ஏற்பட்டு வந்துள்ளது.
 
அப்பகுதியினர் சிறப்பு பூஜை நடத்தினார் வீடு கட்டும் பணி விரைவில் முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி அந்த பெண் மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்ற சாமியாரை பூஜைக்கு அழைத்தார்.
 
அதன்படி அவரும் வீடு கட்டும் இடத்தில் பரிகார பூஜை செய்தார். பின்னர் நான் நடத்த உள்ள பூஜையில் நீங்கள் நிர்வாணமாக கலந்துக் கொண்டால், தோஷம் நிவர்த்தியாகும் என்று தெரிவித்துள்ளார்.
 
அதிர்ச்சி அடைந்த பெண், இதுபற்றி அவரது உரவினர்களிடம் கூறினார். ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் முத்துக்குமாரை தாக்கி, அவரது நாக்கை அறுத்து விட்டனர்.
 
வலியால் அலறிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் அந்த பெண் உள்பட அவரது உறவினர்கள் இருவர் மீது வழக்கு செய்து உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்சரிக்கை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை