Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் வெற்றி எங்கே? இமாச்சல் விரைந்த சைதை துரைசாமி.. பனியால் மீட்பு பணிகளில் தொய்வு?

Siva
திங்கள், 5 பிப்ரவரி 2024 (18:51 IST)
முன்னாள் சென்னை மேயர்  சைதை துரைசாமி மகன் வெற்றி, இமாச்சலப் பிரதேசத்திற்கு தனது நண்பர்களுடன் சென்ற நிலையில் அவர் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து  சைதை துரைசாமி மகனை தற்போது மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்  அவருடைய நண்பர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் சைதை துரைச்சாமி உடனடியாக இமாச்சல பிரதேசம் விரைந்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் தற்போது பனி அதிகம் இருப்பதை அடுத்து மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் இனி நாளை காலை தான் மீட்புபணி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்  சைதை துரைச்சாமி மகனை காணவில்லை என்ற செய்தி அறிந்து அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சைதாப்பேட்டை இல்லத்திற்கு குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments