Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தேர்தல் எப்போது..? அண்ணாமலை சொன்ன அப்டேட் கரெக்டா இருக்குமா..?

Senthil Velan
திங்கள், 5 பிப்ரவரி 2024 (18:02 IST)
ஏப்ரல் 2வது அல்லது 3வது வாரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழுக்கள் அமைத்து 
தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதன் தொடர்ச்சியாக சென்னை அமைந்தகரையில் உள்ள பாஜக தலைமை தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது தொண்டர்களிடையே பேசிய அண்ணாமலை,  “பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். 

2019 போல இம்முறையும் தேர்தல் அறிவிப்பு வந்தால் ஏப்ரல் 2வது அல்லது 3வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்கு மிக குறுகிய நாட்களே உள்ளன என்றும் அவர் கூறினார்.

ALSO READ: ஆளுநருடன் மோதலா..? அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்..!
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் அண்ணாமலை தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments