Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் – கமல்ஹாசன் டுவீட்

தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் – கமல்ஹாசன் டுவீட்
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (16:49 IST)
நேற்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ஈட்டு விடுப்புத் தொகை ஓராண்டு நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்காக ஈட்டு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.

 
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல பாலிவுட் நடிகர் மேலும் 2 கோடி நிதி உதவி ! மொத்தம் 30 கோடி…