Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் முதல்வராக 10 நாட்கள் போதும்! – எஸ்.வி.சேகர் சூசகம்!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (13:33 IST)
கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் ரஜினி பதிவிட்டுள்ள நிலையில் ரஜினி முதலமைச்சர் ஆவது குறித்து பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

கந்தசஷ்டி கவச விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். அதற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்நிலையில் விரைவில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என கராத்தே தியாகராஜனும் கூறி வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜகவினரே சிலர் ஆதரவாக அடிக்கடி பேசி வருகின்றனர். ரஜினியின் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சமீபத்தில் பேசியுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் “ரஜினி அரசியலுக்கு வந்தார் என்றால் பத்து நாட்களில் முதல்வர் பதவியை அடைவார்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினி கட்சி தொடங்கினால் பாஜக அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களுக்குள் அடிக்கடி பேசப்பட்டு வரும் நிலையில் பாஜகவினரும் ரஜினிக்கு ஆதரவுகளை அளித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments