Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸ் செல்லுமா? போக்குவரத்து துறையின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:51 IST)
மார்ச் மாதம் எடுத்த ரூ.1000 பாஸ் செல்லுமா?
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல் சென்னையில் மட்டும் 3000 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தமிழகம் முழுவதும் 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
மேலும் பயணிகளுக்கும் பேருந்து மற்றும் ஓட்டுனர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் இதனை அடுத்து மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸ் பயணிகள் பயன்படுத்த முடியாமல் போனது 
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து அறிவிப்பு ஒன்றை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது சென்னையில் மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸை செப்டம்பர் 15 வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் எனபோக்குவரத்து துறை அறிவித்துள்ளது
 
மார்ச் மாசம் எடுத்த பாஸ், பொதுமுடக்கம் காரணமாக ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால் அதற்கு பதிலாக தற்போது செப்டம்பர் 15 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments