Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (13:05 IST)
சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கிய உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி என்ற இடத்தில் ஏரியில் ஏப்ரல் 22ஆம் தேதி குளிக்கச் சென்ற பிரசாந்த் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் எதிர்பாராத விதமாக நேரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த செய்தி கேட்டு தான் மிகுந்த வேதனையை அடைந்ததாக கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருவரது குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார். 
 
அதேபோல் கடலூர் மாவட்டம் குமாரமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் இன்பரசன் ஆகிய இருவரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று ஏரியல் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
 
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கும் அவர்களது நண்பத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments