Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு எதிரான வழக்குகள் வாபஸ்: பல்டி அடித்த ஆர்.எஸ்.பாரதி!

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (13:03 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது திமுக எம்பி ஆர்.எஸ் பாரதி முறைகேடு வழக்கு தொடுக்க சொல்லி விடுத்த மனுக்களை திரும்ப பெற்றார்.

தமிழகத்தில் சாலைகள் அமைக்க டெண்டர் விடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதேபோல கிராமங்களுக்கு இணைய வசதி அளிக்கும் பைபர்நெட் டெண்டரிலும் முறைகேடு நடந்துள்ளதாக திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்க விடுத்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அரசு டெண்டர் குறித்து அளித்த விளக்கங்களை ஏற்றுக்கொண்டதாகவும், அதனால் மனுவை திரும்ப பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவதூறு வழக்கில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானதற்கும், தற்போது முதல்வர் மீதான முறைகேடு மனுக்களை ஆர்.எஸ்.பாரதி திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதற்கு சம்பந்தம் உண்டா என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments