Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள்!!

இனி ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள்!!
, வியாழன், 10 நவம்பர் 2016 (14:25 IST)
மக்களின் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்-களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர்.
 
இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும், நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்.களில் 500, 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
தற்போது, நாளை முதல் சில்லரை தட்டுப்பாடு தடுக்கும் பொருட்டு 50 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.களில் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் அறிவிப்பால் குப்பையாகும் 14 லட்சம் கோடி ரூபாய்