Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 ரூபாய் போட்டால் மாஸ்க் வரும்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயந்திரம்

5 ரூபாய் போட்டால் மாஸ்க் வரும்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயந்திரம்
, புதன், 12 மே 2021 (08:43 IST)
5 ரூபாய் போட்டால் மாஸ்க் வரும்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயந்திரம்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அனைவரும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா அணியாமல் வெளியே வந்தால் சட்டப்படி குற்றம் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன
 
இந்த நிலையில் அனைவருக்கும் மாஸ்க் கிடைக்கும் வகையில் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தனியார் அமைப்பு ஒன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஐந்து ரூபாய் செலுத்தினால் முகக்கவசம் வழங்கும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்துள்ளது 
 
இந்த இயந்திரத்தில் பொதுமக்கள் ரூபாய் 5 செலுத்தினால் ஏடிஎம்-ல் இருந்து பணம் வருவது போலவே மாஸ்க் வரும். அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற முகக்கவசம் இயந்திரம் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதனையடுத்து அந்த தனியார் அமைப்பு அதனை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிச்சிட்டீங்க சரி.. வலிமை அப்டேட் எங்க? – வானதியை குடையும் அஜித் ரசிகர்கள்