Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுப்பொலிவு பெறுகிறது அம்மா உணவகங்கள்.. ரூ. 5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி..!

புதுப்பொலிவு பெறுகிறது அம்மா உணவகங்கள்.. ரூ. 5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி..!

Mahendran

, வெள்ளி, 14 ஜூன் 2024 (10:23 IST)
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய 5 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி அம்மா உணவகம் திமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருந்தாலும் சில அதிருப்திகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 5 கோடியில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களையும் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அம்மா உணவகங்களின் கட்டிடங்களை சீரமைப்பது, பழுதான பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை மாற்றுவது ஆகிவற்றை செய்ய மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ருசியான புதிய வகை உணவுகளையும் அம்மா உணவகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!