Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ.490 பணம்.. வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவதாக அறிவிப்பு..!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (07:36 IST)
குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வரும் நிலையில் அரிசி சர்க்கரைக்கு பதிலாக  குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 490 ரூபாய் பணம் அனுப்பப்படும் என புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது.  

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரைக்கு பதில் ரூபாய் 490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

ரேஷன் கடையில் வழங்கும் அரிசி, சர்க்கரைக்கு பதிலாக பணம் கொடுப்பதால் தாங்கள் விரும்பிய பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் இதே போன்ற குடும்ப  அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் விலை உயருமா?

ஐ.நா., பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை: அதிர்ச்சி தகவல்..!

காந்தி ஜெயந்தி தினத்தில் புதிய அரசியல்: பீகாரில் சாதிப்பாரா பிரசாந்த் கிஷோர்?

சதுரகிரியில் மஹாளய அமாவாசை வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

தமிழக காங்கிரஸ் பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: போலீசாருடன் செல்வபெருந்தகை வாக்குவாதம் ..!

அடுத்த கட்டுரையில்
Show comments