Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000: அமைச்சர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (15:53 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 4000 வழங்கப்படும் என புதுவை மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் இதுகுறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும் என்றும் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூபாய் 2000 நிதி வழங்கப்படும் என்றும் அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
புதுச்சேரி மாநிலத்தின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments