ஆர்.கே.நகரில் ரூ.20 லட்சம் பறிமுதல்: தினகரன் ஆதரவாளரிடம் விசாரணை

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (12:23 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவும், தினகரன் அணியினர்களும் வாக்காளர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.6000 வரை பணம் கொடுத்து வருவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன்னர் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் செல்வியிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த பணமா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஆனால் 'எங்களின் ஆதரவாளரிடம் ரூ.20 லட்சம் பிடிப்பட்டது என்பது பொய்' என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த நிலையில் 'நேற்று மட்டும் அதிமுக மற்றும் தினகரன் அணியால் ரூ.100 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் திட்டமிட்டு இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் கண்டும் காணாமல் இருப்பதாகவும் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments