Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90 நாட்களில் ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அதிரடி

Webdunia
புதன், 30 மே 2018 (07:53 IST)
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன் மாணிக்கவேல் அவர்கள் பதவியேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து கொண்டு வரப்படுகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பழனி கோவிலில் நடந்த முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் இவர்தான் என்பதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.
 
இந்த நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயில் சிலைகள் ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளன. ரூ.150 கோடி மதிப்பிலான ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் சுமார் 60 வருடங்களுக்கு முன் திருடு போன நிலையில் இந்த சிலைகள் தற்போது குஜராத்தில் மீட்கப்பட்டது
 
இந்த சிலைகள் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்ட 90 நாட்களில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு எடுத்த அதிரடி நடவடிக்கையின் மூலம் இந்த சிலைகள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மீட்கப்பட்ட சிலைகள் ரயில் மூலம் நாளை சென்னை வந்தடையும் என தகவல்கள் கூறுகின்றன. இன்னும் தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான சிலை பொக்கிஷங்கள் வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களுக்கு கடத்தப்பட்டதாக கூறப்படுவதால் ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்களின் குழு அனைத்து சிலைகளையும் மீட்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments